அன்னையர் நாள்
நம்மிலும் மாறுப்பட் ட பண்பாட்டினரான வளர்ச்சியடைந்த நாடுகளில் அன்னையர் நாள்,தந்தையர் நாள்,குழந்தையர் நாள்,காதலர் நாள் இன்னும் எண்ணற்ற நினைவு,கேளிக்கையானக் கொண்டாட்டங்கள் இன்னும் பல நாடுகளில் கிறித்துவர் பிறந்த நாளை குடும்பம் இணையும் நாளாகவே கொண்டாடுகின்றனர்.எல்லாரும் எல்லா வசதிகளும் பெற்று வாழ்கின்றனர்.அதற்காக கடந்த இரண்டு உலகப் போரில் ஏற்பட்ட
அழிவிலிருந்து மீண்டு தங்களின் கடின உழைப்பால் மிக அலப்பரிய முன்னேற்றம் கண்டுள்ளனர்.அந்த உழைப்பில் எழுந்தருளிய இடங்களில் நம் திரைப்படத் துறையினர் அரைக்குறைய ஆடைகளில் தளுக்கு ஆட்டங்களை ஆடி படப்பிடிப்பு நடத்தி காசாக்குகின்றனர் நம்மவர்.அதைக் காணும் நாமும் அந்நாட்டிலுள்ளதை போல நம் நாட்டையும் செய்வோம் என்கிற எண்ணம் நமக்கு வருவதில்லை.ஆக, அது போன்று நாமும் நம் நாட்டிலுள்ள அனைவரும் ,அனைத்து வசதி பெறும் ஒழுங்குகள்,பொதுநலன் வசதிகள் முதலில் செய்ய முற்படுவோம்.அதன்பின் உலக வல்லரசு கனவு காண்போம்.ஏன் அதன் பின் வளர்ச்சியடைந்த நாடுகள் நம்மை ஏளனமாக பார்ப்பதை விடுவர்.நாட்டில் மக்கள் குடிசைகளில் வாழும் போக்கை மாற்றி ஏனையவர்கள் போல் நல்ல வீடுகளில் வாழும் வழி காண வேண்டும்.அதுவரை தேவையற்ற களியாட்டங்களை தவிர்ப்போம்.தவிர
அன்னையர் நாள் போன்ற அருமை நாட்களை முதன்மையாக மதிப்போம்,அரவணைப்போம்.போற்றுவோம்.ஆனால்
தமிழ் ஈழத்தில் இரண்டாயிரம் பெயர்கள் இன்று சிங்கள அரச படையினரால் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி மனதைக் கலக்கமடைய வைக்கிறது.இதில் எத்தனை தாய்மார்களோ? எத்தனை தாய்மார்கள் தங்கள் பிள்ளைகள்,உறவுகளை இழந்தும்,அடிப்பட்டுள்ளதைப் பார்த்து கதறும் அந்த தாய் உள்ளத்தை நாம் எங்ஙனம்அமைதிப்படுத்தப் போகிறோம்.சிந்திக்க! உடனே செயல்படுக!
ஆ.பெ.மணியரசன்