Wednesday, 10 March 2010
பொன்மொழி
"நம்பிக்கை எதன் மீது ஏற்பட்டாலும் சரிதான்; அது உண்மையில் நம்பிக்கைக்கு உரியதாக இருக்க வேண்டும்; அப்போதுதான் வெற்றிக் கிட்டும்" - டாக்டர் எம். ஜி. இராமச்சந்திரன்
Archive for October 2009

நோபல் வென்ற மூன்று தமிழர்கள்

Saturday, October 10th, 2009

அக்டோபர் 08,2009

வயவர்(சர்) சி.வி.இராமன், சுப்ரமணியம் சந்திரசேகர் ஆகிய நோபல் பரிசு பெற்ற தமிழர்கள் வரிசையில் சிற்றம்பலத்தை சேர்ந்த அறிவியலாளர் வெங்கட்ராம்ன் இராமகிருட்டிணனும் இடம்பெறுகிறார். இந்தியாவை சேர்ந்த அறிவியலாளர்கள் அரிதாகவே நோபல் பரிசு பெற்று வரும் வேளையில்,இராமகிருட்டிணன் பரிசு பெற்றிருப்பது, தமிழர்கள் அனைவருக்கும் பெருமை.