தமிழுக்காக அரும்பணியாற்றிய வ.அய். சுப்பிரமணியம்  மறைந்தார்.

 

தனது வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழிக்காக அரும்பணியாற்றிய தமிழ் அறிஞர் வ.அய். சுப்பிரமணியம் (82) மறைந்தார். தமிழகம் மட்டுமல்லாது, பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தமிழை முன்னிறுத்தி பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டவர். அவரது இழப்பு தமிழுக்கும், தமிழ் மொழி ஆராய்ச்சியாளர்களுக்கும் பேரிழப்பாகும்.