Wednesday, 10 March 2010
பொன்மொழி
"நம்பிக்கை எதன் மீது ஏற்பட்டாலும் சரிதான்; அது உண்மையில் நம்பிக்கைக்கு உரியதாக இருக்க வேண்டும்; அப்போதுதான் வெற்றிக் கிட்டும்" - டாக்டர் எம். ஜி. இராமச்சந்திரன்

நோபல் வென்ற மூன்று தமிழர்கள்

அக்டோபர் 08,2009

வயவர்(சர்) சி.வி.இராமன், சுப்ரமணியம் சந்திரசேகர் ஆகிய நோபல் பரிசு பெற்ற தமிழர்கள் வரிசையில் சிற்றம்பலத்தை சேர்ந்த அறிவியலாளர் வெங்கட்ராம்ன் இராமகிருட்டிணனும் இடம்பெறுகிறார். இந்தியாவை சேர்ந்த அறிவியலாளர்கள் அரிதாகவே நோபல் பரிசு பெற்று வரும் வேளையில்,இராமகிருட்டிணன் பரிசு பெற்றிருப்பது, தமிழர்கள் அனைவருக்கும் பெருமை.

தமிழ் சான்றோர் பிறப்பு

மடங்கல்                                                 ஆகத்து

   4  ப.சீவானந்தம்                                         21

   9  தமிழ்த் தென்றல் திரு.வி.க.                 26

                                                                   செம்பதம்பர் 

  19  வ.உ.சிதம்பரனார் (1872)                         1

   20  சாலை இளந்திரையன் (1930)                6

    29  அண்ணா   (1909)

          மறைமலை அடிகள்                              15

     31  ஈ.வெ.ரா.                                                 17

தமிழுக்காக அரும்பணியாற்றிய வ.அய். சுப்பிரமணியம்  மறைந்தார்.

 

தனது வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழிக்காக அரும்பணியாற்றிய தமிழ் அறிஞர் வ.அய். சுப்பிரமணியம் (82) மறைந்தார். தமிழகம் மட்டுமல்லாது, பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தமிழை முன்னிறுத்தி பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டவர். அவரது இழப்பு தமிழுக்கும், தமிழ் மொழி ஆராய்ச்சியாளர்களுக்கும் பேரிழப்பாகும்.

திருமிகு முனைவர் திருமுருகன்

 

திருமிகு   முனைவர் திருமுருகன் ஐயா அவர்களின் திடீர் மறைவு

தமிழுக்கு மீண்டும் பேரிழைப்பைத் தந்துள்ளது.தன் வாழ்நாள் முழுவதும்

 தமிழுக்கு பாடாற்றிய முனைவர் திருமுருகன் போன்ற தமிழறிஞர்களை

வாழும் காலத்திலேயே அவர்களின் தகுதி , திறன்களை உடனுக்குடன்

தமிழின் மேம்பாட்டிற்கு பயன்படுத்துவதோடு அவர்களை மதிக்கப்படுவது என்பது

தமிழுக்கு ஆதரவாக தமிழாய்ந்த நற்றமிழ் உணர்வு நிறைந்த தமிழராச்சி

இல்லாதது தமிழரது பெருங்குறையே!.இனியேனும் இக்குறையினைக் களைய

திருமுருகனார் மறைவு நாளில் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

திருமுருகனார் உற்றார் உறவினர் அவரின் பிரிவில் வாடும் அனைத்து

உள்ளங்களோடும் என் துயரினைப் பகிர்ந்துக்கொள்கிறேன்.

யாழ் நூலகம்

யாழ் நூலகம்
இன்று 31.05.2008 யாழ் நூலகம் சிங்கள இனவெறியர்களால்
திட்டமிட்டு 31.05.1981 அன்று தீயிலிடப்பட்ட நாள்.
நூறாயிரத்திற்கும் மேற்பட்ட அரிய நூல்கள் தீக்கிரையாக்கிய நாள்.


தமிழன் குரலில் தேட



உங்கள் மின்மடலைக் காண